விழுப்புரம்: மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட பாமக சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ கலியவரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனிவேல் வரவேற்றார்.
தொடர்ந்து பத்திரப் பதிவையும் உயர்த்தினார். தற்போது நடந்த நிதி நிலை அறிக்கையில் ரூ.6,500 கோடி வரி போட்டுள்ளார். தற்போது ரூ.7872 கோடி மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டு காலத்தில் மொத்தம் ரூ.40 அளவில் வரி, கட்டணத்தை உயர்த்தி அரசின் வருமானத்தை அதிகரித்துள்ளார். இவ்வளவு உயர்த்தியும் மின்கட்டண உயர்வு தேவையா? தமிழக சரித்தரத்தில் இப்படியொரு கட்டண உயர்வு நடந்ததில்லை. ஜெயலலிதா 2013ல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறி உள்ளார். ஆனால் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு கூட திட்டத்தை அறிவிக்கவில்லை.
தமிழகத்துக்கு மொத்தம் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் நமக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. 4500 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு மத்திய, மாநில ஆட்சிகள் தான் காரணம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் புதிய திட்டங்களை கொடுப்போம். தமிழக அரசு மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பேசினார்.


0 comments:
Share your opinion