எனது மைத்துனன் வீட்டில் நடந்த உண்மை சம்பவம். நடந்தது என்னவோ ஒரு களவு ஆனா அதுக்கு கொடுத்த பில்டப்பு தான் றெம்ப றெம்ப பெரிசு, சரி நடந்த விசயத்துக்கு வாறன் எனக்கு இரண்டு மச்சான்மார் ஒருத்தன் பேரு சட்டி மற்றவன் பேரு அண்டங் காக்கா. ஒருத்தன் றெம்ப நல்லவன் மற்றவன் றெம்ப பீற்றரு. அவன் பீற்றர் மாத்திரமல்ல ஒரு body builder ம் கூட உயரம் 6 அடிக்கு மேல, இப்பிடி சொல்லப்படும் அண்டங் காக்கா ஒரு திருடனை பிடிச்ச கதை தான் இது.
இவர்கள் தந்த பேப்பர் ரிப்போட்.....
ரிப்போட்டர்:-கள்ளன் வந்த போது நீங்க என்ன செஞ்சீங்க?
அண்டங் காக்கா:- நானு கொறட்டவிட்டு தூங்கிட்டிருந்தன்.
சட்டி:- நானு TV பாத்துகிட்டிருந்தன்.
ரிப்போட்டர்:- எத்தனை மணிக்கு தூங்கினீங்க சட்டி?
சட்டி:- நானு 11.30 க்கு படுக்க போனன் நாய் குலைக்கல, குலைச்சிருந்தா "கள்ளன் செத்தான்", அவன் விடியப்புறம் தான் வந்திருப்பான்.
ரிப்போட்டர்:-பக்கத்து வீட்டுகாறர் சொன்னாங்க நாய் 11 மணிக்கு விடாம குலைச்சதெண்டு!
சட்டி:- நான் 11 க்கு படுக்க போனன் நாய் குலைக்கல குலைச்சிருந்தா கேட்டிருக்குமே!!!!!
அண்டங் காக்கா:-இவன் எப்பவும் இப்புடி தான் என்ன நடந்தாலும் அவனுக்கு தெரியாது அவன் இருந்தபடியே தூங்குவான்.
சட்டி:- நீதானே சின்ன சத்தம் கேட்டாலும் எளும்பிடுவ என்டுவ ஆனா நீ தூங்கினீ தானே?
அண்டங் காக்கா:- நான் முழிச்சிருந்தன் ஒரு கள்ளனை எண்டாலும் வெட்டி இருப்பன் "அவன் 10 அடி அடிச்சா நான் 2 அடி அடிக்கமாட்டன்"
நாய்க்கு கல்லால எறிஞ்சு தலையில காயம் இருக்கு “நாய் முழிப்பாகத்தான் இருந்திருக்கு” இவன் தான் தூங்கிட்டான்.
சட்டி:- இது என்ர பிழையில்ல சத்தம் கேட்டு நீங்க எழும்பாம இருந்தது உங்கட பிழை!
மொத்தத்தில சட்டியும் body builder ம் கள்ளனை கோட்டை விட்டது தான் நடந்தது ஆனா வீராப்பில யாரும் சளைச்சவங்க இல்ல.

1 comments:
குட்டி அண்ணா ”தெரிஞ்சிரிச்சா இது எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சா” றெம்ப sorry அண்ணா
Share your opinion