Thursday, June 14, 2012

ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தா மறுபடியும் கைது!

நித்யானந்தா (2)நித்தியின் பெண் சீடர் கூறிய பாலியல் புகார், மற்றும் பத்திரிகையாளர்களைத் தாக்கியது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டு கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார் .

இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள அவரது பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்த முதல்- மந்திரி சதானந்த கவுடா உத்தரவிட்டார்.

இந்நிலையில் நித்யானந்தா தலைமறைவானார். அவரை கைது செய்யும் முயற்சியில் கர்நாடக போலீசார் தீவிர முயற்சியில் இறங்கினர். இதனை தொடர்ந்து போலீசில் பிடிபடாமல் நேற்று ராமநகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கோமளா முன் சரணடைந்தார்.

அப்போது தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.சரணடைந்த அவரை ஒரு நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, கர்நாடகா போலீசார் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா (3)நித்யானந்தா (1)விசாரணைக்காக இன்று ராமநகரம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இவரது ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி கோமளா அவருக்கு நிபந்தனையின் பேரின் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவர் பிடதி ஆசிரமத்துக்கு செல்லவும் தடை விதித்தார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்தநித்யானந்தா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நித்யானந்தாவை ராமநகரம் மாவட்ட ஆட்சியர் முன் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நித்யானந்தா (1)

By Anonymous with No comments

0 comments:

Share your opinion

Share me on facebook